×

வியாபாரியை வெட்டி செல்போன், பணம் அபேஸ்

பெரம்பூர்: புளியந்தோப்பு காந்திபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (22), இவர் பாரிமுனை குடோன் தெருவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, அருகே உள்ள காந்திபுரம் விநாயகர் கோயில் எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் நான்கு பேர் கும்பல் கார்த்திகேயனிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக அடித்தனர். அவர்களில் ஒருவன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனின் தலை பகுதி மற்றும் கையில் ஓங்கி வெட்டினார். இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். பிறகு கழுத்தில் கிடந்த ஒரு சவரன் மதிப்புள்ள செயின் மற்றும் அவரது செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மர்ம கும்பல் ஓடி விட்டனர். அக்கம்பக்கத்தினர் கார்த்திகேயனை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்போது கார்த்திகேயன் தலையில் 12 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (190, சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயது சிறுவர்களை கைது செய்தனர். மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்….

The post வியாபாரியை வெட்டி செல்போன், பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Karthikeyan ,street ,Puliantopu Gandhipuram ,Parimuna Gudon Street ,
× RELATED சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும்...